svr.pamini

Montreal Time

Thursday, March 15, 2012

தூய தமிழ் பேசும் ஒரு தமிழனும் இல்லாத இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் தமிழராகிய நாம் இன்னும் ஆதரவளிப்பது அவசியம் தானா?


தூய தமிழ் பேசும் ஒரு தமிழனும் இல்லாத இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்னும் தமிழராகிய நாம் இன்னும் ஆதரவளிப்பது அவசியம் தானா? சனல் 4 தொலைக் காட்சியே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்று தொடர் அவசியம் தானா என கேட்டிருக்கும் போது சற்று யோசிக்க வேண்டிய விடயமே
   இருத்தி எழுப்பவும், அடக்கி ஆளவும் ஒரு பொம்மைச் சமூகமாக எம்மை தம் உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி பிழிய நினைத்தவர்களுக்கு முன்னால்- வேங்கை நெருப்பாக நின்று காட்டியவன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உலகம் முணுமுணுத்த ஒரே ஒரு பெருமைக்குரியவனாய் வாழ்ந்து நின்று நிலைத்து தன் நிழலைக்கூட எவரும் தொடமுடியாத விர வரலாற்றை எழுதியவன்.
எமக்கான அரசியலை உலக அரங்கில் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒற்றைக்குடைக்குள் நிற்க வைக்க நாம் செய்ய வேண்டிய பணி ஏராளமாய் காத்து கிடக்கின்றது. கழுத்தறுப்பு அரசியலை கைவிட்டு விட்டு புனிதமான செயலில் புறப்பட தயாராக வேண்டும்.
இத்தனைக்கும் மத்தியில் துதிபாடிக்கொண்டு பலபெயர்களில் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டு ஈழவிடுதலை உணர்வோ கனவோ இன்றி வெறும் பணத்திற்காக பற்சோந்தித் தனமாக மாரடிக்கும் பேர்வழி எதைச்சொன்னாலும் செய்யும்! எழுதும் தமக்கென இலட்சியமோ,குறிக்கோளோ இப் பிறவிகளுக்கில்லை செக்கென்ன சிவலிங்கமென்ன எல்லாம் ஒன்றுதான் என்று வாழாமல் மக்களின் விடுதலைக்காக, விடிவுக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

No comments:

Post a Comment

Photobucket