svr.pamini

Montreal Time

Tuesday, December 27, 2011

ஈழத்தமிழரையும் இந்தியதமிழரையும் தமிழரென ஒன்றிணைத்த வணக்கம் லண்டன் Mega star show with vedeo link..

தமிழர்களின் ஒருங்கிணைப்பை மேற்கொண்ட சன் நெட் வோர்க்கும் ராடன் குழுமத்திற்கும் நன்றி...

Wednesday, December 21, 2011

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை காண்க –

தமிழின உணர்வாய் வாழும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கி வெளியாகியுள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்இந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புனிதவதி என்கிற அந்தச் சிறுமியின் துயரமிக்க வாழ்வு, நமது சொந்தங்கள் ஈழ மண்ணில் இன்றளவும் அனுபவித்துவரும் துயரத்திற்கு ஒரு அத்தாட்சியாகும். உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் மற்றுமொரு படமலல, அது நம் தமிழர்களின் குருதி சிந்தும் வரலாற்றின் குறியீடு என்பதை உணர வேண்டும்தை தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று திரையரங்கில் பார்த்திட வேண்டும் http://www.youtube.com/watch?v=iblusqds2oA&feature=mfu_in_order&list=UL

Wednesday, December 14, 2011

ராஜபாட்டை திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு



தமிழ் திரையுலகில் சீயான் விக்ரம் நடித்துள்ள ராஜபாட்டை திரைப்படம் வருகிற 23 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சீயான் விக்ரம் நடித்துள்ள ராஜபாட்டை திரைப்படத்திற்கான தணிக்கை நேற்று(12.12.2011) நடைபெற்றுள்ளது.
இதில் 
ராஜபாட்டை திரைப்படத்திற்கு யு சான்றிதலை தணிக்கைக் குழு வழங்கியுள்
ளது. இதையடுத்து வருகிற 23 ஆம் திகதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தில் சீயான் விக்ரம் திரைப்படத்திற்கு இதுவரை இல்லா அளவிற்கு ராஜபாட்டை அதிக திரையரங்குளில் திரையிடப்படஉள்ளது. தெலுங்கில் ராஜபாட்டை இம்மாதம் 30 ஆம் திகதி திரையிடப்பட உள்ளது.

Wednesday, November 23, 2011

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனராக விளங்கிய ஸ்டீவை ஞாபகப்படுத்தும் அவரது ரசிகர்கள்



ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனராக விளங்கிய ஸ்டீவ்-ன் மரணம் நம்மில் அனேகருக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தாலும், இது போன்ற புகைப்படங்களும் ஓவியங்களும் அவரது சாதனைகளையும் கண்டுபிடிப்புகளையும் நம்மை திரும்பி பார்க்க செய்கின்றன.ஸ்டீவின் ரசிகர்கள் அவரை ஞாபகப்படுத்தும் வகையில் அவரது புகைப்படங்களையும், ஓவியங்களையும் வடிவமைத்து இணையதளங்களில் உலாவவிட்டுள்ளனர். அவர் மறைந்தாலும் அவரது கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன.

Monday, November 14, 2011

காதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது? ஆய்வாளர்கள் கருத்து


காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள்.
காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம்.
நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் ரொமான்டிக் செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள்.
புரிதலும் விட்டுகொடுத்தலும்
காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகி விடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும்.
நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.
பொழுது போக்கு காதல்
காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர்.
உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.
அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.
வாழ்க்கை முழுதும் தொடரும்
காதலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும் என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள்.
இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.
எல்லைமீறாத காதல்
இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல்.
வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.
விட்டுக்கொடுக்காத காதல்
ஒருவருக்கொருவர் சீண்டிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர்.
உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை இனிப்பு காதல் என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும்.
அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார்.
இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
உயிர் தரும் காதல்
காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.
என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது என்றும் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து கொள்ளுங்கள்.

Wednesday, October 26, 2011

படம் பார்க்கும் முன் படத்தின் தரம் பார்க்க : வேலாயுதம் விமர்சனம் 2011-10-25 03:50:12



இந்திய சினிமா வரலாற்றில்,தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் ஜெயம் ராஜா,விஜய், மற்றும் தெலுங்கு சினிமா வரலாற்றில் கூட இந்த மாதிரி ஒரு படம் வந்தது கிடையாது.அதற்கு உதாரணம் தான் இந்த படம். ராஜா கோடு மேல கோடு போட வச்சிருந்த பென்சில் உடைஞ்சி காணாமப் போயிருச்சாம். அதனால முதல் தடவையா சொந்தமா யோசித்து படம் எடுக்கிறாராம்.

ஜெனிலியா ரொம்ப புத்திசாலி (விஜய் கிட்ட இருக்கும் போது மட்டும் முட்டாள்) பத்திரிக்கை நிருபரா வேலை செய்கிறார்.பசுபதி அந்த ஊர்ல தாதா.ஆனா பகவத் கீதை பாக்குற எல்லோருக்கும் உபதேசம் பண்ணுவார். அவரோட உண்மையான முகம் ஜெனிலியாவுக்கு மட்டும் தான் தெரியும்.(பின்ன ஒரிஜினல் படத்துலையும் கதை அப்படித்தான் போகுது). அப்படியிருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்துல பசுபதியின் ஆட்கள் சாக அதை வைச்சது வேலாயுதம் தான் என்று துண்டுச்சீட்டுகள் மூலம் வதந்தி பரப்புகிறார்.

அப்படியே கட் பண்றோம்.இது எதுவும் தெரியாம அத்தைப் பொண்ணு,அம்மா என்று சந்தோஷமாக ஆடல் பாடல் ஊரே மதிக்கும் ஒருவராக கிராமத்தில் வாழ்கிறார் விஜய்.(மதிக்காம மிதிச்சா கொஞ்சம் நல்லாயிருக்கும்).இப்போ விஜய் ஜெனிலியா,பசுபதி இருக்கிற ஊருக்குப் போக ஒரு காரணம்.அதுக்கு இட்டாங்கடா அந்த தங்கச்சி சரண்யாவ. தங்கை இருந்தா போதுமா.சிட்டிக்கு எப்படி போக. கல்யாணம் பண்ணுங்கடா. கல்யாண நேரத்துல எப்படிடா சிட்டிக்கு போகுறது. தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு சிட்பண்ட்ல பணம் போட்டியிருக்காரு விஜய்.அதுவும் ரவுடி இருக்கிற சட்டியில தான் அகப்பை போட முடியும்.பணத்தை எடுக்க அந்த ஊருக்கு போக.

அப்ப பாத்து ஊர்ல நிறைய இடத்துல குண்டு வெடிக்க அந்த இடத்துல எல்லாம் விஜய் ஜஸ்ட்ல மிஸ் ஆகுறார். எப்படின்னா குண்டு அவர் செருப்பு பக்கத்துல வெடிக்கும்.இங்க யார்டா பொட்டு வெடி வெடிச்சதுன்னு கேக்காம எஸ் ஆயிருவாரு. அப்ப பாத்து கோவில் அர்ச்சகர் உங்க பெயர் என்ன அப்படி கேக்க(அப்பத்தானே வேலாயுதம் பெயர் எல்லோருக்கும் தெரியும்).அதே மாதிரி விஜய் சொல்ல ஆபத்பாந்தவர் வந்துட்டார் அப்படி மக்கள் பில்டப் கொடுக்கிறாங்க.(அதே மாதிரி தான் தியேட்டர்ளையும் சொல்வாங்க). ஜெனிலியா வந்து நீங்க தான் அதுக்கு சரியான ஆள்னு சொல்ல நான் அதுக்கு சரி வர மாட்டேன்னு விஜய் சொல்ல (எதுக்குப்பா அதை சொல்வீங்களா..இல்ல வடிவேலுக்கு சொல்லாம விட்ட மாதிரி இருந்துருவீங்களா) ஜெனிலியா நீங்க தான் அதுக்கு சரியான் ஆள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாம் சொன்னா விஜய் கேப்பாரா. சிட்பண்ட்ல பணத்தை ஏமாத்துறாங்க. ஜெண்டிமேன், இந்தியன்,அன்னியன்,சாமுராய், ரமணா, இன்னும் வர்ற போற சங்கர் படம் மாதிரி இவரு பணம் போன உடனே பொங்குறாரு.பொங்குறாரு.லாஜிக் இடிக்குமே.சரி இப்படி வைப்போம்.பணம் போனதால மக்கள் எல்லாம் தற்கொலை செய்ய பொங்கி எழுந்து மாஸ்க்கைப் போட்டுகிறார். அழிக்கிறார்.

நடுவுல விஜய் தங்கச்சி கல்யாணம். விஜய் மேல சந்தேகம் வந்து வில்லன் குண்டு வைக்க இவர் சாகாம சரண்யா காலி. லேசா முகம் தெரிஞ்ச காரணத்துனாலத்தான் இங்கே வந்துட்டாங்க அப்படி சொல்லி ராவோடு ராவாக இன்னொரு மாஸ்க் தைக்கிறார். அப்படியே கிளம்பி எதிரிகளை அழிக்கிறார். அப்பத்தான் ஒரு உண்மை தெரியுது பசுபதி இந்து இல்ல இந்தியாவை இழிக்க (சாரி ஒரு ரைமிங் வரட்டுமே என்று சொல்லி விட்டேன்) அழிக்க வந்த முஸ்லீம் (கொய்யால இதையாவது மாத்துங்க). உடனே துவம்சம் பண்ணி இந்தியாவை காப்பாத்தி விட,ஜெனிலியா,ஹன்சிகா இருவரும் விஜய்க்காக போட்டி போட எனக்கு கோட்டி கிழிய..



இந்தியா முழுக்க ரசிகர்கள் படத்தை கொண்டாட வருங்கால பிரதமர் என்று போஸ்டர் அடித்து விடுகிறார்கள்.இது தெரிந்து ஒபாமா கூட்டணிக்கு விஜயைக் கூப்பிடுகிறார். எனக்கு சூலாயுதம் படம் நடிக்க வேண்டும். பெயரும்,ஹீரோயின்,இயக்குனர், தயாரிப்பாளர் தான் வேற.கதை அதே தான்.எனக்கு அது தான் முக்கியம் என்று சொல்லி விட்டு வர. தொல்லை தாங்க முடியாமல் ஒரு கேஸ் போடலாமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள். ரசிகர்கள் (அவர் ரசிகர்கள் குறையாமலிருந்தால்) அடுத்த படமாவது நல்லா வந்து விடாதா என்று நப்பாசையோடு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

Monday, April 4, 2011

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே..... மதராசபட்டிணம் (blue ray)

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பரஸ்பர மொழியறியாத இரு காதலர்கள் தங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டு அன்பில் திளைக்கும் தருணம் இது. திரு. கண்ணதாசனுக்கு பிறகு கவிதைகளுக்காக அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களை எழுதும்  கவிஞர் சந்தேகமின்றி திரு. நா.முத்துக்குமார் தான்.

திரை படம் : மதராசபட்டிணம்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


[தான தொ தனன,தான தொ தனன]

Male: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே,
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

Female: எதுவும் பேசவில்லையே,இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?......!
Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே......!
[தான தொ தனன,தான தொ தனன] 
Male: வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே! Female: நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
Male: வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Female: வாளின்றி, போரின்றி, வலியின்றி, யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே?
Male: இதயம் முழுதும் இருக்கும் இந்த  தயக்கம்,
எங்கு கொண்டு நிறுத்தும்
Female: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்,
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
Male: பூந்தளிரே ……

Female:
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn’t have you next to me?
Oh where would I be? Oh where, oh where?

Male: எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே! 
Female: எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே!
Male: யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல்,
இவளோடு ஒரு சொந்தம் உருவானாதே!
Female: ஏனென்று கேட்காமல்,தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
Male: பாதை முடிந்த பிறகும், இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
Female: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
Male/Female: இது எதுவோ!
[தான தொ தனன,தான தொ தனன]

Female: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
Female: புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
Male: நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
Female: எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே …என்ன புதுமை?

Female/Male: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
Male: இது எதுவோ!!
[தான தொ தனன,தான தொ தனன]

Sunday, April 3, 2011

முள்ளிவாய்க்கால் முதல் பென்காசி வரை சர்வதேசத்தின் இரட்டை வேடங்கள்...






பாரசீகக்குடாவில் கடந்த ஒரு வாரமாக மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் கொதி நிலையை அடைந்துள்ளது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானைத் தாக்கி அணு உலைகளில் கசிவினை ஏற்படுத்தி இரண்டாம் உலக மகா யுத்த காலத்து ஹிரோசிமா, நாகசாகி அழிவுகளை நினைவுபடுத்துகின்றன.
எரிசக்தித் தேவையின் 70 வீதத்தை அணுசக்தி ஊடாகப் பெறும் ஜப்பான், அணுஉலை வெடிப்பினால் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளினால் நிமிர முடியாத அளவிற்கு முடக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து மீண்டெழக்கூடிய பொருளாதார பலம் ஜப்பானிற்கு இருக்கும் அதேவேளை, மன்னராட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சிகளினால் நீண்ட கால பாதிப்பிற்குள்ளான அரபு நாடுகள், எண்ணெய் வளம் இருந்தும் தம்மை மீளக் கட்டியெழுப்ப இந்த வல்லரசுகள் இடம் தருமா என்கிற கேள்வி எழுகிறது.
இருப்பினும் உலகின் கைத்தொழில் சக்தி மையமாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜப்பான், தனது கைத்தொழில் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களின் கையிருப்பு தீர்ந்து வரும் நிலையில் மேலதிக இறக்குமதி தடைப்படுவதால் பாரிய சிக்கலை எதிர்கொள்வதைக் காணலாம்.
உற்பத்திக்குத் தேவையான கனிமங்களை வெவ்வேறு இடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் உலக எண்ணெய் உற்பத்தியில் பெரும்பாலான விழுக்காட்டினை மத்திய கிழக்கு நாடுகளே கொண்டிருக்கின்றன.
அதாவது, பூமியதிர்வுகளால் பாதிப்படைந்துள்ள ஜப்பானில் அணு உலைகள் நீண்ட காலத்திற்கு எரிபொருள் சக்திப் பற்றாக்குறையை ஏற்படுத்தப் போகிறது. அதனை ஈடு செய்ய குறிப்பிட்ட காலத்திற்காகவாவது எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஜப்பான் தள்ளப்படும்.
அதுமட்டுமல்லாது ஜப்பானைப் பொறுத்தவரை அதனுடைய முழுமையான பொருளாதாரமும் இறக்குமதியாகும் மூலப் பொருட்களிலும் எண்ணெய்யிலும் தங்கியுள்ளது.
ஏற்கனவே உயர் தொழில்நுட்பம் சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்குத் தேவையான அரிதான கனிமங்களை (Rare Earth Minerals) இவற்றின் உலக ஏற்றுமதியில் 90 வீத விழுக்காட்டினை கொண்ட சீனாவிடமிருந்து பெறுவதில் அண்மைக் காலமாக பல சிக்கல்களை ஜப்பான் எதிர்கொள்கிறது.
உலக வர்த்தக அமைப்பு (WTO) வரை இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.
இவை தவிர பணவீக்கம், உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் பலமடையும் ஜப்பானிய "யென்' நாணயத்தின் பெறுமதி போன்றவை உள்நாட்டிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் பலத்த தாக்கங்களை உருவாக்குகின்றது.
அண்மையில் வீழ்ச்சியடையும் பங்குச் சந்தையை நிமிர்த்துவதற்கு திறைசேரியிலிருந்து 185 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாணயச் சந்தையில் (Money Market) உட்செலுத்தியது.
இதனால் சற்று நிமிர்ந்த பங்குச் சந்தை மறுபடியும் விழ தினமும் மேலதிகமாக பல பில்லியன் டொலர்களை நாணயச் சந்தையில் கரைத்துக் கொண்டது ஜப்பான். ஆனால் புழக்கத்தில் விடப்பட்ட "யென்' நாணயத்தை வாங்குவோரின் அதிகரிப்பினால் அதன் பெறுமதியும் உயரத் தொடங்கியது.
அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்த 850 பில்லியன் டொலர்களை Quantitative Easing (2) இரண்டு என பராக் ஒபாமா முன்பு முன்னெடுத்த விடயத்தையே ஜப்பான் இப்போது கடைப்பிடிக்கின்றது.
இருப்பினும் ஜப்பானில் ஏற்படப் போகும் பொருளாதார உற்பத்தி நெருக்கடிகளும், மத்திய கிழக்கிலுள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் உருவாகும் புதிய மாற்றங்களும் உலகப் பொருளாதார கட்டமைப்பில் புகுத்தப்பட்ட உலகமயமாதல் கோட்பாட்டில் சிதைவுகளை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை.
வட ஆபிரிக்க மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போது ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சிகள், புதிய சமநிலையை உருவாக்கி, அதை உள்வாங்க வேண்டிய நிலைக்கு வல்லரசாளர்களைத் தள்ளப் போகிறது.
துனீசியாவில் ஆரம்பமாகி தற்போது லிபியாவிலும், யெமனிலும் கொதி நிலையை அடைந்துள்ள அரச எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சிகள், எத்தகைய புதிய மாற்றத்தைக் கொண்டு வருமென்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் பல அரசியல் ஆய்வாளர்கள் தடுமாறுகின்றனர்.
கடந்த வாரம் லிபிய மக்களைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 1973, அரபு லீக்கின் வேண்டுதலோடு லெபனான் மூலம் கொண்டு வரப்பட்டாலும் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரேஸில் போன்ற பொருளாதார பலம் பொருந்திய நாடுகள் அதனை ஆதரிக்காமல் மௌனம் சாதித்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக, பொஸ்னியா, கொலம்பியா, பிரான்ஸ், கபொன் (Gabon), லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 10 நாடுகள் வாக்களித்தன.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாத இந்தியா கூறும் வாதம் வேறு விதமானது.
ஈராக்கில் ஏற்பட்ட நிலைமை மற்றும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உருவாகும் படைத்துறை கட்டளை மையத்தின் பங்களிப்பு குறித்த நிலைப்பாடுகளால் தாம் ஒதுங்கி இருப்பதாக தன்னிலை விளக்கமளிக்கிறது.
ஆனாலும் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசியில் (Bengashi) வாழும் 10 இலட்சம் மக்களை கடாபியின் படைகள் படுகொலை செய்துவிடுமென்கிற அச்சநிலையை இந்தியா கவனத்தில் கொள்ளவில்லை.
முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட போது மௌனம் சாதித்த அல்லது விக்கிலீக்ஸ் வெளிப்படுத்துவது போன்று ஆதரவளித்த இந்தியா, 10 இலட்சம் பென்காசி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றும் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு மௌனம் சாதித்ததையிட்டு புலம் பெயர் தமிழ் மக்கள் அதிர்ச்சியடையவில்லை.
இவை தவிர வான் பறப்புத் தடையைக் (No Fly Zone) கொண்டு வர வேண்டுமென முன்னின்ற அரபு லீக்கின் தலைவர் அமிர் முசா, கூட்டுப் படைகள் நடத்தும் வான் தாக்குதலை தற்போது கண்டிக்க ஆரம்பித்துள்ளார்.
கேணல் கடாபியின் வானூர்தி எதிர்ப்புத் தளங்களை அழிக்காமல் வான் பரப்பில் சூனியப் பிரதேசத்தை உருவாக்க முடியாதென்கிற யதார்த்தத்தை அரபு லீக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
மக்கள் மீது குண்டு வீசும் கடாபியின் போர் விமானங்கள் வானில் பறப்பினை மேற்கொள்ளக்கூடாது.
அதேவேளை அதனை அமுல் செய்யும் வகையில் கண்காணிப்பில் ஈடுபடும் கூட்டுப்படைகளின் விமானங்களை கடாபியின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தினாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திப்பது போலிருக்கிறது அரபு லீக்கின் நிலைப்பாடு.
பென்காசியை நெருங்கிய கடாபியின் தாங்கிகள் மீது பிரெஞ்சு போர் விமானங்கள் தாக்குதலை நடத்தாமல் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படி பறப்புத் தடையில் மட்டுமே ஈடுபடுவோமென அடம் பிடித்திருந்தால் 10 இலட்சம் மக்கள் வாழும் அப்பிரதேசத்தில் பேரழிவு நிகழ்ந்திருக்கும்.
அக்கூட்டமைப்பில் இருக்கும் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளே தமது முழுமையான ஆதரவினை இந்த கூட்டுப்படை நடவடிக்கைக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன.
தமது மக்களை நீண்ட காலமாகவே ஒடுக்கி வரும் ஏனைய நாடுகள், இதற்கு ஆதரவு வழங்குமென எதிர்பார்ப்பது தவறு. இன்று யெமனிலும் (ஙுஞுட்ஞுண), லிபியா போன்று மக்கள் கிளர்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
அந்நாட்டின் ஐ.நா. தூதுவர் மற்றும் சீனா, சிரியா, எகிப்திலுள்ள யெமனின் தூதுவர்கள் தமது பதவிகளை துறந்துள்ளனர். யெமன் அதிபர் அலி அப்துல்லா சாலே (Ali Abdullah Saleh) இன் நம்பிக்கைக்குரிய மூன்று இராணுவ ஜெனரல்கள், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். எகிப்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் இவை.
ஆனாலும் ஜனநாயகத்திற்கெதிரான சதிப் புரட்சியை இராணுவம் அடக்குமென அதன் பாதுகாப்பு அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரை பல புதிய சிக்கலான சமன்பாடுகள் தோற்றம் பெறுவதை அவதானிக்க வேண்டும்.
மேற்குலகத்திற்கு ஆதரவான எதிரான இரு அணிகளை இனங்காணலாம்.
ஆதரவு என்கிற வகையில் சவூதி அரேபியா, பஹ்ரெயின், ஜோர்தான், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, ஈராக், யெமன், குவைத் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எதிரணியில் ஈரான், சிரியா, லிபியா போன்றவை முக்கியமான நாடுகளாகும்.
ஆதரவான நாடுகளில் ஏற்பட்ட ஜனநாயகத்தை நிலைநாட்ட முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்ட மேற்குலகம், எகிப்தில் சமரசப் போக்கினை மேற்கொண்டது.
லிபியாப் பிரச்சினையில் ஜேர்மனியும், பிறேசிலும் ஒதுங்கி நின்றாலும் முரண் நிலையற்ற நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கூட்டு நடவடிக்கைகயை அவை முற்றாக நிராகரிக்கவில்லை. சந்தைப் பங்கீட்டுப் போட்டியே இதற்கான அடிப்படைக் காரணி.
ஆனாலும் லிபியா, பஹ்ரேன், யெமன் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களினால் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பது அரபுலகம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒடுக்கும் அரசுகள், எவ்வாறு மக்கள் போராட்டங்களை ஆதரிக்க முடியும் என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.
கடந்த வாரம் பஹ்ரேனில் 3 மாத காலத்திற்கு அவசரகாலச் சட்டத்தினை அமுல்படுத்தியதிலிருந்து மக்கள் விரோத நிலைப்பாட்டிலிருந்து அவ்வரசு மாறவில்லை என்பது உணரப்படுகிறது.
ஆகவே, ஜனநாயகமற்ற தன்மை, தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக அமைகிறதா? அவ்வாறு மக்கள் புரட்சியினூடாக அரபுலகம், சீரிய ஜனநாயக முறையை உள்வாங்குமாயின் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் நீர்த்துப் போகக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதா? என்பது போன்ற பல வினாக்கள் தற்போது மேலெழுகிறது.
ஆயினும், மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள், அரபு மக்களை ஆக்கிரமித்திருக்கையில், மேற்குலகின் தலையீடுகள் அந்த உணர்வுகளைக் தணிக்க உதவுமா? இன்னமும் நெஞ்சில் வலிக்கும் விடயமொன்று உண்டு.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது உலகத் தமிழினம் ஒன்று திரண்டு ஓங்கிக் குரல் கொடுத்தது.
மேற்குலக ஊடகங்கள் யாவும் போரைத் தடுத்து நிறுத்தி மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு எழுதிக் குவித்தன.
பயங்கரவாத ஒழிப்பு என்கிற போர்வையில் மக்களின் அழிவினை வேடிக்கை பார்த்தார்கள்.
இன்று முள்ளிவாய்க்கால், லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசிக்கு இடம்பெயர்ந்திருக்கிறது.
அழிவினைத் தடுக்க வல்லரசாளர் ஓடி வருகின்றார்கள். மக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை தலைநகர் திரிபோலியில் தேடி அழிக்கின்றார்கள்.
லிபிய மக்களின் இரட்சகராக இன்று மேற்குலகம்.
அன்று யாரும் வரவில்லை. பக்கத்து வீட்டுக்காரரும் வரவில்லை. தமிழினத் தலைவரும், போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக பொய்யுரைத்து தமிழகத்து எழுச்சியை முடக்கினார்.
ஆகவே மன்னாரில் எண்ணெயை கண்டுபிடிக்கும் வரை பொறுமை காத்தருள்க.

Saturday, March 26, 2011

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி.....

டில்சான், தரங்க சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.
ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
உபுல் தரங்க 102 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும்.
எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, March 24, 2011

விஜயகாந்த்தை விளாசிக்கட்டிய வண்டுமுருகன்......



திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டு தான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.
கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல் தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா.
ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத் தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க. அந்த கட்சி பெயர் கூட வாயில் வர மாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க.
முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதே போல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. நான் இந்த அணிக்கு வர காரணம் அண்ணன் அழகிரி மற்றும் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களும்தான்.
கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் சொன்னதை செய்வார். நமக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் கேட்டு பெறலாம் என்றார்.

Friday, March 18, 2011

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு) ...


பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Sunday, March 13, 2011

கொலையும் செய்யும் காதல்

காதல் என்பது இருமனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் தருணத்தில் மூளைக்குள் மின்னி மறையும் உணர்வுதான். அது ஆண், பெண்ணுக்கு இடைப்பட்டதாகவோ அல்லது இரு ஓரினப் பாலினருக்குஇடைப்பட்டதாகவோ அமைந்துவிடுகின்றது. மின்னி மறையும் நொடியில் ஏற்படுத்தப்படும் ஈர்ப்பின் ஆழத்திலேயும், நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு காதல் வயப்படும் நபர்களிடம் இருக்கும் சாதகத் தன்மைகளிலேயுமே அந்தக் காதலின் புனிதத்தன்மை இருக்கிறது. அதன் நிலைத்திருப்பும், உண்மைத் தன்மையும் அடங்கியிருக்கின்றன

ஆனால் அண்மைக்காலமாக யாழ்ப்பாணப்பத்திரிகைகள் வெளியிடும் காதல் தொடர்பான செய்திகள் அதிர்ச்சி தருவனவாயுள்ளன. தொடர்ச்சியாகப் பிறந்த சூடு ஆறும் முன்னேயே அழகான சிசுக்கள் தெருக்களில் எறியப்படுகின்றன. பற்றைக்காடுகளுக்குள் உரப்பைகளில் சுற்றிப் போடப்படுகின்றன. வீட்டுக்கோடிகளில் புதைக்கப்படுகின்றன. இந்த நிலைமை நல்ல பண்பாடுமிக்க சமூகமொன்றுக்கு விழுந்த சாபக்கேடாகவும் நோக்கப்படவேண்டும்.
 
கடந்த ஆண்டு வெளியான யாழ்ப்பாணப் பெண்கள் பற்றிய தரவு அறிக்கையொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பெண்கள் தந்தையின் பெயர் தெரியாத குழந்தைகளை வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகளில் வெளியிடும் தகவல்களைவிட சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபடும் திருமணமாகாத இளம் பெண்களின் தொகை பல மடங்காக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் உயர்தரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் நிலையைக் கடக்காத பெண்பிள்ளைகளே இந்த நடவடிக்கைகளில்  ஈடுபட்டுவருவது கவலையளிக்கின்றது. இக் கவலையளிக்கும் செய்திகளில் இருந்துதான் யாழ்ப்பாணத்தில் காதல் பிறக்கும் தருணங்கள் பற்றிச் சிந்திக்க வைத்தது. இன்றைய இளைஞர், யுவதிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட கைத்தொலைபேசி, Face Bokk போன்றன எல்லா எல்லைகளையும் கடந்து உறவைப்பேண வைக்கிறது. அந்த  உறவு கர்ப்பப்பைவரை ஊடுருவி அதனை நிரப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் வரை நிலைத்திருக்கும் வகையில் பின்னப்படுகிறது, பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதே இங்குள்ள சோகம். இதற்கு அதிவேகமாகப் பரவிக் கொள்ளும் காதல் காய்ச்சல்தான் பிரதான காரணம்.யாழ்ப்பாணத்து நகர்ப்புறங்களிலும் உள்ளகப் பகுதிகளிலும் இருக்கும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றன அதிகளவில் பெண் உழைப்பாளர்களை நம்பியே வாழ்கின்றன. அந்த நிலையங்களில் பொருள் விற்கப்படுகிறதோ இல்லையோ பெண் உடலங்கள் இலகுவாக விற்கப்பட்டுவிடுகின்றன.
வணிகமயப்பட்டுப் போன கல்வி, சாதாரணதரம் படிக்கும் பிள்ளையைக்கூட நகரம் நோக்கி இழுக்கிறது. இந்த ஈர்ப்புக்கள் முகம் முன்தெரியா, பின்தெரியா நபர்களோடு தொடர்பினை உருவாக்கி வருகிறது. இதில் பல நன்மைகள் இருப்பினும் கட்டுரையின் பிரதான கருப்பொருளுக்கு அமைவான காரணிகளும் இருக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் வேலியே பயிரை மேயும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மாணவியையே காதலித்துத் திருமணம் செய்து பிரச்சினைப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதுபோல் பேருந்து நடத்து நர்கள் மீதும் இந்தக் குற்றங்கள் சுமத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் காதலின் கலைக்களஞ்சியமாக மாறிவிட்டது போலவே காட்சியளிக்கிறது. முதலாம் வருட மாணவர் தொடக்கம் முதுநிலை விரிவுரையாளர்கள்வரை புரியும் லீலைகள் யாழ்ப்பாணத்து மக்கள் அறியாத செய்தியல்ல. பல்லினப் பண்பாடுகளுடன் வரும் ஆண்களும் பெண்களும் பெரும் கற்பனைகளோடும் கனவுகளோடும் உள்நுழைகின்றனர். இடைக்காலத்தில் தொற்றிக்கொள்ளும் காதல் மயக்கம் கொஞ்ச நாள்களுக்குள்ளேயே தோலுக்கானதாகவும், தசைக்கானதாகவும் மாறிவிடுகிறது. வெறும் பொழுது போக்குக்காகவும் சுகங்களுக்காகவும் காதல் வயப்படுகின்றனர். 4 வருடமும் ஒரே காதல் சோடியாய் எங்கும் திரிபவர்கள் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறியவுடன் வேறொரு வரை நலன்களின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.
 
ஆனாலும் பல்கலைக்கழகச் சூழலிலும், தமிழ்ச் சமூகத்திலும் கற்பு என்பது பிரதான ஒழுக்கப்பண்பாகவே பேசப்படுகிறது. பேருந்துகளிலும்,பேருந்து நிலையங்களிலும் காதல்படும்  பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பேருந்தின் பின் இருக்கைகளின் முன் இருக்கும் இருக்கைகளில் பின்பக்கம் பெரும்பாலும் கைத்தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்படாமல் இருப்பதேயில்லை. 

பேருந்துக்குள் நிற்கும் சில இளைஞர்யுவதிகள் பயணச் சிட்டைகளையும் நாணயத் தாள்களையும் காதலைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாகவே  கையாளுகின்றனர்.  இந்தத் தொடர்புகளால் உருவாகும் பிணைப்பின் உச்சத்தில் இளைஞர்களும் யுவதிகளும் நடந்து கொள்ளும் முறைகள் பஸ்ஸினுள் பயணிப்பவர்களைக் கூடக் கவனிக்காத அளவுக்குச் சென்றுவிடுகிறது. அந்த லீலைகள் அவர்களின் பெற்றோருக்குச் சமமானவர்களையோ, கற்பித்த ஆசிரியரையோ, மதிப்பதில்லை. பேருந்து நிலையம் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
யாழ்ப்பாண பெருநகரத்தில் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்படும் களியாட்டங்களும் நிகழ்ச்சிகளும் அதிகமாக மேய்ந்தது பெண் உடலங்களைத்தான். நிகழ்வு முடிந்து மறுநாள் காலை அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்குள்ள மறைவான இடங்களில் அதிகமாகச் சிதறிக்கிடப்பவை ஆணுறைகளும் உள்ளாடைகளும்தான்.
இந்தக் கட்டுக் கடங்காச் சுய கட்டுப்பாட்டு மீறல்கள்தான் நம் இடங்களைச் சிசுக்களை எறியும் குப்பை மேடுகளாக மாறவைக்கின்றன. 

காதல் என்பது ஓர் உணர்வு. அது தவறாகப் பேசுவதற்கு அருவருப்பான ஒன்றில்லை. தமது சமூகப் பெறுமதியையும் அதன் உயர்தரமான பண்பாட்டையும் கவனத்திலெடுத்து காதலைக் காதலிக்க வேண்டும். இல்லையேல் அநாதைச் சிசுக்களின் எண்ணிக்கையும் தந்தை தெரியாத பிள்ளைகளுடன் இளம் தாய்மார்களது எண்ணிக்கையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
 

Friday, March 11, 2011

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை(வீடியோ இணைப்பு)...

ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.  செண்டை நகரில் உள்ள ஒரு பெற்றோல் ஸ்ரேசன் தீப்பற்றியதால் பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வாறு ஜப்பானில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள விரும்பும் நபர்கள் 0772267929/0115743362/011-4719593 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
பிந்திய செய்தி
ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளில் பயங்கர பூகம்பத்தின் தொடர்ச்சியாக சுனாமி தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது.
செண்டாய் நகரில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 200-ல் இருந்து 300 வரையிலான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்,
மேலும், 88 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. 349 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் 900 வலுவான அவசரக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது.
இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியா, இலங்கை போன்ற ஏனைய ஆசிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்
* ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
* வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

* கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.
* செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.
* ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.
* ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.
*  சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.
* பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.
* மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.
*  தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.
* பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.
* லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.

Friday, March 4, 2011

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது iPad 2...

                                                  இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் சாதனமான அப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 டெப்லட் கணனி நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
i pad 2
இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்விற்காகஅப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது சுகயீனத்தையும் பொருட்படுத்தாமல் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ பேட் & ஐ பேட் 2
அப்பிளின் முதல் ஐ பேட்கள் உலகம் முழுவதும் சுமார் 15 மில்லியன் விற்பனையாகியதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

Tuesday, March 1, 2011

லிபியா அதிபர் கடாபியும் அவரது பெண் பாதுகாவலர்களும்......

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.

அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. 

இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது

Sunday, February 27, 2011

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்!

 பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.
1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத் தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச் சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும் நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.
3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும் அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.
4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன் லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக் கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
5.உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும் பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.
7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும். மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி மாற்றவும்.
8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள் போலத் தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும் தளங்களை நம்பக் கூடாது.
9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின் முகவரியில் “https” என்ற முன்னொட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல “http” உடன் “s” இணைந்து இல்லை என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.
10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு.
11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என மெயில்கள் வந்தால், சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும் தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

Tuesday, February 22, 2011

இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை - விஜய்


இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும். இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் உரையாற்றும்போது நடிகர் விஜய் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரஸ்தாப கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் 4 மணிக்கு மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.  மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் 5.45 மணிக்கே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் கைகளை தூக்கி ஆரவாரம் செய்தனர். நடிகர் விஜய் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இதற்கிடையே நடிகர் விஜய் பொதுக்கூட்ட மேடையில் பேசிய போது, ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பியை இழந்தால் எவ்வாறு துன்பப்படுவோமோ அதுபோல இன்று நாம் ஒன்று அல்ல, 2 அண்ணன்களை இழந்து துயரப்பட்டு உள்ளோம் என பேசிக்கொண்டு இருந்த போது மழை தூறியதாலும், ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு ஆர்ப்பரித்து வந்ததாலும் விஜயால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் பேச்சை நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.
பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மீண்டும் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.
கடந்த சில வருடங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா?
இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இலங்கை இராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல.
நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட.
மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்றார்.

Sunday, February 20, 2011

பார்வதி அம்மைக்கு கண்ணீர் அஞ்சலி

பூகம்ப வீரத்தைப் பெற்றவள் இன்று
  புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள்  இன்று
   விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவள் இன்று
   வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ ஒரு
  யாத்திரையோடு முடியுதோ?!
வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
 வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
  சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
   நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
    பாவ உலகம் வெறுத்ததோ
பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
  போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
  நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
  உண்மையில் பூமி  பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
   வஞ்சகம செய்தினம் கொன்றது
வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
  விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
   நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
   தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
  கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
  தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
   ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
   தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
  நாடகமாடி உடைத்தமோ
போனதுதான் திரும்புமோ -அந்த
 பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
 நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
  தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
   ஏழைகளு கினியாரம்மா

Saturday, February 19, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளின் பலம், பலவீனம்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன.
அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.
அவுஸ்திரேலியா
பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.
எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.
பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை அவுஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.
சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்தது போல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசை திருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி.
நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் துடுப்பாட்டத்திற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.
பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதியவரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.
பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உள்ளது என்பது பலவீனம்.
சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.
இலங்கை
பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.
லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பந்துவீச்சில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.
பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.
சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இங்கிலாந்து
பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.
பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.
சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.
மேற்கிந்தியத் தீவுகள்
பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.
பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.
சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.
தென் ஆப்பிரிக்கா
பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.
பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிஸையே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.
சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்த போதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
நியூசிலாந்து
பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.
பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.
சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.
பாகிஸ்தான்
பலம்: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.
பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.
சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர்
Photobucket