ஏ.ஆர். ரஹ்மான் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஆர்.கே.சேகர் என்பவரது ஒரே மகனாவார். ரஹ்மான் ஒன்பது வயதாயிருக்கும் போதே அவர் தந்தை காலமானார். அதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர்கள் குடும்பம் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாயைக் கொண்டு காலம் தள்ளி வந்தது. இந்நிலையில் ரஹ்மானின் சகோதரி ஒரு விசித்திர நோயினால் தாக்கப்பட்டார். அந்நோயை சூஃபி துறவி ஒருவர் தீர்த்து வைத்தார். அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார் திலீப் என்ற பெயர் கொண்ட அல்லா ராகா ரஹ்மான்.
ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார்.
1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000 மட்டுமே. இப்படத்திற்கு முதன் முதலாக ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் ரஹ்மான் மின்சார கனவு (1997) லகான் (இந்தி 2002) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (2003) ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் ரஹ்மான். தில் சே, தால் ஆகிய இந்திப் படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து 2006 வரை பத்து படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் இயக்குனர் சங்கருடன் இணைந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், நாயக், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அதே போல் இவர் இசையமைத்த ரஜினியின் படங்களான முத்து, படையப்பா, இப்போது சிவாஜி ஆகியவற்றின் பாடல்கள் மிகவும் பிரபலபலாமாக இந்தியாவில் மட்டுமின்றி ஜப்பானில் பேசப்படுகிறது.
இவர் வாரியர்ஸ் ஆப் ஹெவன் அண்ட் எர்த் (Warriors of Heaven and Earth) (2003) என்ற சின ஆங்கிலப்படத்திற்கும் பின்னணி இசையமைத்துள்ளார். இவர் வந்தே மாதரம் என்ற (1996) இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். பாம்பே டிரீம்ஸ் (Bombay Dreams)(2002) என்ற ஆங்கில நாடகத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார்.
ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி அவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது. ரகுமான் பாடல்களைக் கேட்க இங்கே கிளிக் பண்ணவும்-> Rahman hits இசைத்தொகுப்புகள்
தீன் இசை மழை (1989)
அந்தி மழை (1990)
செட் மீ ஃபிரி (Set Me Free)(1991)
வந்தே மாதரம் (1997)
ஜன கன மன (2000) மற்றும் (2006)
பாம்பே டிரீம்ஸ் (2002)
இக்னைடட் மைண்ட்ஸ் (Ignited Minds)(2003)
ராகாஸ் டான்ஸ் (Raga's Dance)(2004)
பான்யான் தீம் இசை (Theme Music for The Banyan)(2006)
தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (The Lord of the Rings - Theatre Production)(2006)
வோர்ல்ட்ஸ்பேஸ் சிக்னேச்சர் இசை (World Space Signature Tune)(2006)
ஏர்டெல் இசை (Airtel Tune) (2006)
பிரே பார் மி பிரதர் (Pray for me Brother - UN Theme song for Poverty Allevation)(2007)
Thursday, December 23, 2010
Saturday, December 18, 2010
2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு!
உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது.உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது. 26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க். செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை ஆண்டுதோறும் 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. |
Friday, December 17, 2010
அனைவராலும் எதிர்பார்கப்படும் விஜையின் காவலன்.....
டிசெம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிரது காவலன். தொடர்ச்சியாக ஆறு படங்களின் தோல்விக்கு பிறகு (எழாவது தடவையுமாக) அனைவராலும் பெருத்த எதிர்பார்பிற்க்குள்ளாகியுள்ளது காவலன் திரைப்படம்.தற்போது பாடல்கள் வெளிவந்துள்ளன. வித்தியாசாகரின் மெல்லிசையில் காதிற்கு இனிமையளிக்கின்றன..கில்லி வெற்றிக் கூட்டணி என்ற காரணத்தால் வித்யாசாகரை நம்பிக் களத்தில் இறங்கியிருக்கிறார்.
இருந்தும் உலகத் தமிழர்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அசினை நம்பிக் களத்தில இறங்கியிருப்பது ஒரு தடைக்கல் ஆகவே கருதப்படுகிறது.விஜையின் பிளஸ் எண்டு எடுத்துக் கொண்டால் அவரின் அமைதி,சிறப்பான நடனம் குறிப்பிடத்தக்கது. நடனம் பாடலின் ஒரு அங்கமாகவே பார்கப்படுகின்றது.வித்தியாசமான நடிப்பே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது இதுவே விஜையிடம் உள்ள மிகப்பெரிய மைனஸ்.மேலும் மேடை நிகழ்ச்சிகளிலேயே அதிகம் பேசாதவர் தனது தந்தையின் சுய விருப்பின்பேரிலே அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.இதுவும் அவரின் சினிமாவாழ்க்கையை தொலைப்பதாக உள்ளது.விஜையின் ரசிகர் கூட்டம் இதை உணர்வதில்லை. அவரை விமர்சித்தால் "விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி" எண்டு புலம்புகினம். நாங்களும் எதிர்பார்ப்போம் காவலன் ஸ்கோரை....??????????????
Thursday, December 16, 2010
யாழ் மண்ணின் கலாச்சார அடையாளம் மாட்டுவண்டிச்சவாரி...
யாழ் மண்ணில் வருடம் தோறும் ஒரு போட்டி நிகழ்வாக இந்த மாட்டுவண்டிச் சவாரி நடைபெற்றுவருகிறது.நீர்வேலி தரவை பகுதியில் இந் நிகழ்வு இடம்பெறும்.குடாநாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் மாடுகள் கொண்டு வரப்படும்.மாடுகளுக்கு உசாரேற்றுவதற்க்காக சாராயம் பருக்கப்படும் மற்றும் ஊசிக்கம்பிகளால் மாடுகளில் முதுகில் குற்றுதலும் இடம்பெறும்.இது ஒரு மிருகவதையாக இருந்தாலும் போட்டிநிகழ்வாகக் காண்கையில் ஒரு சுவாரஸ்யம் மிக்கதாகும்....
Friday, December 10, 2010
அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்துக்கு 60 வது பிறந்தநாள்
நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் யங் சூப்பர் ஸ்டார், சூப்பர் நாயகன்,தளபதி என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொண்டு திரியும் பொழுது கிட்டத்தட்ட 30 வருடமாக "சூப்பர் ஸ்டார்" என்ற எந்த பெருமையில்லாமல் எளிமையாக வாழ்ந்து வருகிறார் ரஜனிக்காந்.
வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்.
குசெலன் தோல்வியையும் எந்திரென் வெற்றியையும் சமமாக நோக்கியவர்.சக கலைஞர்களுடன் ஈகோ இன்றிப் பழகுபவர். தமிழ் சினிமாவின் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரெ ஒரு சுப்பர்ஸ்டார் என்றால் அது திரு றஜனிக்காந் அவர்கள் மட்டுமே.....இவன் பெயர் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டது நிலவு தனை முட்டும்.அவர் 100 வயது மட்டும் வாழ்ந்து எந்திரென் போன்ற மிகபிரமாண்டமான வெற்றிப்படங்களைக் கொடுக்கவேண்டும்.
Tuesday, December 7, 2010
வாஷ் அவுட் ஆனது ரத்தசரித்திரம் - நஷ்டத்தை ஈடுகட்ட இறங்கி வந்தார் சூரியா!!!!
தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள்கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.
இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் கட்சி தயாரிபாளரான துரை.தயாநிதிக்கு விற்று விட்டார்

ரத்தசரித்திரம் மண்ணைக் கவ்வியதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள். ரத்தச்சரித்திரம் வெளியானது இயற்கைக்கே பிடிக்கவில்லை. கடந்த இருபது நாட்களாக தமிழகத்தில் பதினைந்துக்கும் அதிகமான மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது மழை. இரண்டாவது காரணம் மழை பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும் ரத்தச் சரித்திரம் செத்தச்சரித்திரம் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் படத்தைப் பார்த்துச் சென்ற ரசிகர்களின் மவுத்டாக். இத்தனை கொடுமையான வன்முறைக் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லாததால் படம் கொடுமை என்று சொல்லிச்சென்றதால் மழை இல்லாத மாவட்டங்களிலும் வாஷ் அவுட். மூன்றாவதாக நாம் தமிழர் இயக்கத்தினர் விநியோகித்த ‘ ஏன் ரத்தசரித்திரம் தமிழர்கள் புறகணிக்க வேண்டிய திரைப்படம்?’ என்ற பத்து லட்சம் துண்டுப் பிரசுரங்கள் தமிழம் முழுவதும் விநியோகிகப்பட்டதோடு, இதே விஷயத்தை எட்டு லட்சம் கல்லூரி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியது என்று மூன்றாவது காரணத்தைச் சொல்கிறார்கள்.
எல்லாம் போகட்டும்! தமிழர்களுக்கு ஈழத்தில் ஏற்பட்ட இழப்பை பற்றிக் கவலைப்படாத சூரியா, ரத்தசரித்திடம் மூலம் தயாரிபாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட துரைதயாநிதி தயாரிக்கும் படம் ஒன்று 2012-ல் கால்ஷீட் கொடுத்து விட்டாரம். சூரியா கால்ஷீட் கொடுத்த பிறகே சமாதனம் ஆனாராம் புதுமாப்பிள்ளை துரை. தயாநிதி!!
Sunday, December 5, 2010
கலைஞரின் இலவச டீவி அரசியலும் விஜையின் இலவச அரிசி அரசியலும்.......
Wednesday, December 1, 2010
8 வயது சிறுவனின் அதிரடி நடனம்: மைக்கல் ஜக்சனை மிஞ்சுவானா?
8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.
தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.
இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.
அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.
இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.
அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
Monday, November 29, 2010
நீயா நானா
சின்னத்திரையிலே நாடகத் தொடர்கள் தான் கதியெனக் கிடந்த மக்களைப் புதிய நிகழ்ச்சிகள் மூலம் வேறுபரிமாணத்தை அடையவைத்த பெருமை விஜை டீவியையேசாரும்.
அந்த வகையில் தான் பல சுவாரஸ்யமான விவாதப் பொருள்களை எடுத்து விவாதிக்க களம் அமைக்கும் ஒரு நிகழ்ச்சியே கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி....
"இவ் நவீன யுகத்தில் தங்களை அதிகம் மெருகூட்டிக்கொள்பவர்கள் ஆண்களா? அல்லது பெண்களா?
Friday, November 26, 2010
மிருகமே குழந்தை என்றால் மனம் இரங்குகிறது
வேட்டையாடும் குணம் கொண்ட புலி ஒன்று தனக்கு எதிரியாக நினைத்த குரங்கு ஒன்றைக் கொண்று விட்டது, அவ்வுடலை கொண்டு செல்லும் போது தான் இறந்த தாய்க் குரங்கோடு பின்னிப் பிணைந்திருக்கும் குட்டிக் குரங்கை அது தற்செயலாக அவாதானிக்கிறது. உடனே அக் குட்டிக் குரங்கை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறது அந்தப் புலி. இரவு பகலாக அதனோடு உறவாடும் புலி அது தவறிக் கூடக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளதை இந்தக் காணொளியில் காணலாம். இரவில் கூட தன்னருகில் அணைத்து வைத்து அக் குரங்கு குட்டியுடன் தூங்குகிறது. அனால் சிங்களமோ திட்டமிட்டே செஞ்சோலை சிறுவர் இல்லம்மேல் குண்டு மழை போழிந்தது. நவாலியில் சர்ச்சில் கூடியிருந்த குழந்தைகளைக் கொண்றது, துடிக்கத் துடிக்க முள்ளிவாய்க்காலில் பலரை செல்போட்டுக் கொண்றது. பசி பட்டினியால் வாடிய சிறுவர்களுக்கு கஞ்சி கொடுக்கும் போது வரிசையில் நின்றவர்களைக் கூட விட்டுவைக்கவில்லையே இந்தச் சிங்களம். மிருகங்களைக் காட்டிலும் கோரமானவன் சிங்களவன் என எனக்கு உணர்த்தி நிற்கிறது |
Thursday, November 25, 2010
வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?
![]() இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். |
Monday, November 22, 2010
அறிவியல்
இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே...........

கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்ட் கிடைக்கவில்லையே.. கிடைத்தாலும் நிலைக்கவில்லையே.. என்றெல்லாம் இனி கவலைப்பட தேவையில்லை. பரிசுத்தமான அன்பு செலுத்தும் ரோபோவை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் உல்ரிச் கண்டுபிடித்திருக்கிறார்.
இதற்கு பெயர் ‘ஃபங்ஷனைடு’. வழக்கமான ரோபோ போல கை, கால், தலை, வெடுக் வெடுக் நடை இதெல்லாம் இதற்கு கிடையாது. பெரிய சைஸ் தலையணை போல இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளலாம். கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். அதை சோபாவில் வைத்து அதன் ‘மடியில்’ படுத்துக் கொள்ளலாம்.
பலரைப் பற்றிய தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும். தோலின் நிறத்தை வைத்து, யார் தொடுகிறார் என்பதை ஃபங்ஷனைடு தெரிந்துகொள்ளும். அணைக்கும் விதம் மற்றும் உடல் சூட்டை வைத்து சார்/மேடம் அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது. நாம் குஷி மூடில் இருந்தால் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் தனது ‘உடலை’ வைத்துக் கொள்கிறது. நாம் சோகமாக இருக்கும் சூழ்நிலையில் அதை மடியில் வைத்துக் கொண்டால் ஆறுதலாய் உடம்பை வருடிக் கொடுக்கிறது. அதை கட்டியணைத்து படுத்துக் கொண்டால் தட்டித் தூங்க வைக்கிறாற்போல ஆறுதலாய் அணைத்துக் கொள்கிறது.
மனிதரின் உணர்ச்சியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரியாக்ஷனை வெளிப்படுத்துவதற்காக மைக்ரோ சென்சார்கள், மனிதனின் தசைகள் போன்ற மென்மையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
நம்மிடம் அன்பு, பாசம் காட்டத்தான் கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்டை நாடுகிறோம். ஃபங்ஷனைடுகள் வந்துவிட்டால் இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விடும். தனிமையில் வாடும் முதியவர்கள், ஆதரவின்றி இருப்பவர்களுக்காகவே இதை உருவாக்கினேன் என்கிறார் உல்ரிச்.
அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது - ''ஐஸ்வர்யா ராய்"
அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது...''ஐஸ்வர்யாராய் அன்று சொன்னது அர்த்தமுள்ளது. இந்திய அழகியாக, உலக அழகியாக, சினிமா நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். |
அவர் ஒரு சிறந்த அறிவாளி என்கின்றனர் அவருடன் பழகியவர்கள். நடிக்க வந்த புதிதில் ஐஸ்வர்யாராய் சொன்ன கருத்துக்களை சற்று உற்றுநோக்கினால், 1997 ஆகஸ்டு மாதத்தில் ஐஸ்வர்யாராய் கூறியது:- * என்னால் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் நடிக்க முடியவில்லை. நடித்திருந்தால், என்னால் இந்திய அழகி மற்றும் உலக அழகி பட்டங்களை வென்றிருக்க முடியாது. நீங்கள் சில வெற்றிகளை பெறும்போது, சில இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். * சில நடிகைகள் பாதுகாப்பின்றி இருப்பதால், அவர்கள் தவறான பாதைக்கு திரும்பி விடுகிறார்கள். யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. சிலர் ஒழுக்க சீர்கேட்டான வேலையில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது. நான் யாரையும் பழிக்கவில்லை, யாரையும் குற்றப்படுத்தவில்லை. பொதுவாகவே சொல்கிறேன். * பாலிவுட்டில் இன்றைக்கு எல்லா நடிகைகளுமே மேக்கப் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அளவுக்கு மீறும்போது மேக்க , நமது முகத்தை அசிங்கமாக்கிவிடும். ஆதலால், மேக்க செய்வதற்கும் ஒரு எல்லை தேவை. இயற்கையான விஷயங்களே எப்போதும் நமக்கு ஏற்றது. * என்னுடைய உடல் மினுமினுப்பும், அழகும் எனக்கும் பிடிக்கும். ஆனாலும் அந்த வளையத்துக்குள் இருந்து தற்போது மீட்டுவிட்டேன். இல்லாவிட்டால் அழகு என்ற மாயைக்குள் மாட்டியிருப்பேன். அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் ஓடுவது, ஆடுவது எல்லாம் கேமரா முன்பு மட்டுமே... பிற சந்தோஷங்கள் வாழ்க்கையில் ஏராளம் உள்ளன! - 1997-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியது:- * அழகி என்ற இறுமாப்பு என்றைக்கும் ஆபத்தானது. இன்றைக்கு வந்துள்ள புகழ் எனக்கு புதிதாக எதையும் கொடுக்கவில்லை. எனது வாழ்க்கையில் மூன்று கட்டங்களை சந்தித்து விட்டேன். முதலில் மாடலிங், அடுத்து உலக அழகி, மூன்றாவதாக சினிமா. * எனக்கு நானே நல்ல தோழி. ஒவ்வொரு நாள் இரவிலும் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்வேன். இன்றைக்கு யார் யாரை சந்தித்தோம்... அவர்களிடம் என்ன கற்றுக் கொண்டோம் என்று ஆராய்ந்து அறிந்து கொள்வேன்! - 1999-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியவை:- ![]() * பள்ளி, கல்லூரி நாட்களில் என்னை போன்ற இளம்பெண்கள் பெரும்பாலும் டாம்க்ரூஸ், மெல்கி ஸன் போன்றவர்களின் போஸ்டர்களை வைத்திருப்போம். அவையெல்லாம் தேவையற்ற விஷயங்கள் என்று இப்போது நினைத்தாலும், அப்போதைக்கு அவை ஆச்சரியம் தரும் கொண்டாட்டங்கள். டாம்குரூஸை நேரில் சந்தித்து பேசும் வரை அவர் மீதான மோகம் எனக்கு குறையவே இல்லை. * சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சிறந்த டைரக்டர். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன். என்னுடைய கண்களை உற்று பார்த்து எனக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து, அதற்கு தீர்வு கூறுவார். எனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவரிடம்தான் ஓடுவேன். என்னுடைய சந்தோஷங்களில் அவருக்கும் பங்குண்டு. - 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் ஐஸ்வர்யாராய் கூறியவை:- * தொடக்கத்தில் சினிமாவில் நடிக்கும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேராசை பிடித்து தீவிரமாக இருந்தேன். நானும், ஷாருக்கானும் தூக்கமின்றி இரவு, பகல் பாராமல் உழைத்தோம். அந்த நாட்களில் எனது உழைப்பின் இலக்கு இன்றைக்கு எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. * நம்பர் ஒன் இடத்தை பெற என்ன செய்தேன்? ஒன்றுமில்லை... சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைக்கதை, முயற்சி, உழை பு ஆகியவையே முக்கிய காரணம். நம்பர் ஒன், டூ என்றெல்லாம் என்னை எப்போதும் நினைத்து கொள்வதில்லை... ஏனென்றால் இதெல்லாம் நிலையானது அல்ல! * தினமும் 20 முறையாவது கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்த்து ஒழுங்குபடுத்துகிறேன். இதை பகட்டு என்று யாரும் கூற முடியாது. ஏனென்றால் என்னுடைய வேலையே அதுதானே? * வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் நான் பார்த்து விட்டேன். கல்லூரியில் படிக்கும்போது எனக்காக பல இளைஞர்கள் வெளியே காத்திருப்பார்கள். சிலர் என்னை பின் தொடர்ந்து வருவார்கள். இதை நான் தவறாக நினைத்து பயந்தது கிடையாது. எல்லா நிலைகளையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். -2010 ம் ஆண்டில் நவம்பர் மாதம் ஐஸ்வர்யாராய் கூறியது:- மேற்கூறியவகைகளை கடைப்பிடிப்பதால் தான் நான் இப்போதும் அழகாகவும் எனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்க முடிகின்றது. |
Sunday, November 21, 2010
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகிய எந்திரன் இன்று ஐம்பதாவது நாளைக் கடந்துள்ளது
ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ம் திகதி வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படம் பல கோடிகளை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல... இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.
வட இந்தியாவில் மொழிமாற்றம் செய்து வெளியான திரைப்படத்தில் ரோபோவின் வசூல் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.
குஜராத்இ ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல... இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே.
வட இந்தியாவில் மொழிமாற்றம் செய்து வெளியான திரைப்படத்தில் ரோபோவின் வசூல் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ.
குஜராத்இ ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
இன்பத்தை தேடி
மண்ணை தொட்டு
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது
பயிர் செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது
பயிர் செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
சொந்தத்தை பார்க்க பக்கத்து ஊர் போனேன்
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
நின்மதி தேடி கோவிலுக்கு போனேன்
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
எதுவும் வேண்டாமென வீடு வந்தேன்
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....
Subscribe to:
Posts (Atom)